close
Choose your channels

அஜித்-ஷாலினி காதலுக்கு உதவிய ஏகே 47: பிரபல நடிகர் தகவல்!

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி காதலுக்கு பிரபல நடிகர் ஒருவரும் ஏகே 47ம், உதவியாக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

அஜித் மற்றும் ஷாலினி இயக்குனர் சரண் இயக்கிய ’அமர்க்களம்’ படத்தில் நடித்து கொண்டிருந்த போது காதலித்தார்கள் என்பதும் அதன் பின்னர் இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் அனைவரும் தெரிந்ததே

இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி காதலித்துக் கொண்டிருந்த போது இருவரும் வெவ்வேறு படப்பிடிப்பில் இருந்தபோது மொபைல் போன் மூலம் பேசிக் கொண்டதாகவும், அவ்வாறு பேசுவதற்கு 90களின் பிரபல மலையாள நடிகர் ஒருவர் உதவியாக இருந்ததாகவும் தெரிகிறது

பிரபல மலையாள நடிகர் குஞ்சாகோ பூபன் என்பவர் ஷாலினியுடன் ’நிறம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஷாலினியிடம் செல்போன் இல்லாததால் அஜித், குஞ்சாகோவுக்கு போன் செய்து போனை ஷாலினியிடம் கொடுக்க செல்வார் என்றும் ஷாலினியிடம் மொபைல் போனை கொடுக்கும்போது அவர் ‘ஏகே 47 இஸ் காலிங்’ என்று மறைமுகமாகக் அஜித் பேசுவதை குறிப்பிடுவார் என்றும் அதனைப் புரிந்துகொண்டு ஷாலினி மொபைல் போனை வாங்கி கொண்டு தனியாக அஜித்துடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பார் என்றும் குஞ்சாகோ தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் இதனை ஒரு நாள் கண்டு பிடித்துவிட்ட ’நிறம்’ இயக்குநர் கமல், ஒரு நாள் ஷாலினியிடம், ‘இன்று ஏகே 47 பேசவில்லையா? என்று கேட்டதாகவும் ஷாலினி அப்போது அதைக் கேட்டு ஆச்சரியமடைந்ததாகவும் குஞ்சாகோ தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

அஜித், ஷாலினி காதலுக்கு ஏகே 47 மற்றும் பிரபல நடிகர் ஒருவரும் உதவியாக இருந்த தகவல் தற்போது இந்த சமூக வலைதள பதிவில் இருந்து தெரியவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.