ஐபிஎல் போட்டியை அடுத்து குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித்.. இன்று ஒரு முக்கிய நாள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை குடும்பத்துடன் காண வந்த நடிகர் அஜீத், தற்போது குடும்பத்துடன் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த வீடியோவும் வெளியாகியுள்ளன. மேலும், இன்று அஜித்தின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் ரேஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில், அவர் தொடர்ச்சியாக மூன்று சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வென்றார் என்பதையும் பார்த்தோம். இந்நிலையில், அஜித்தின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில், அவருக்கு ’பத்மபூஷன்’ விருது கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
நடிகர் அஜித், நடிகை ஷோபனா உள்பட மூன்று பேருக்கு பத்மபூஷன் விருது, 10 தமிழக தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விருதை பெறுவதற்காக அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியவர்களுடன் டெல்லி செல்கிறார். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி அவர்கள் கையால் ’பத்மபூஷன்’ விருது வாங்கும் அஜித்துக்கு இன்று அவரது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#PadmaBhushanAjithKumar 🏅
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 28, 2025
pic.twitter.com/dzjOMXtSlB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments