close
Choose your channels

வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜீத்தின் பங்கு

Monday, December 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் நடிகர்கள் பலர் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில் இந்த பணியில் ஷாலினி அஜீத்தும் தன் பங்கிற்கு சுமார் 400 பேர்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்துள்ளார்.

ஷாலினி அஜீத் சமூக வலைத்தளங்களில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்த நேரத்தில் சென்னை மந்தைவெளி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவு சமைத்து வருவதாகவும், உணவு தேவைப்படுபவர்கள் தாராளமாக அங்கு வந்து உணவு சாப்பிட்டோ அல்லது எடுத்து கொண்டோ செல்லலாம் என்றும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த பதிவு மிக வேகமாக பரவி பலர் உணவுகளை பெற்று கொண்டு சென்றனர். ஷாலினியை போல பல கோலிவுட் நட்சத்திரங்கள் வெள்ள மீட்புப்பணிக்கு தங்களுடைய பங்கை ஆற்றி தாங்கள் ஒரு சினிமா பிரபலம் மட்டுமின்றி ஒரு சிறந்த குடிமகன் என்றும் நிரூபித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.