சினிமாவை பின்னுக்கு தள்ளுமா வெப்சீரிஸ்: அக்சராஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

தொழில்நுட்ப பரிணாமத்தில் புதிய தொழில்நுட்பம் பழைய தொழில்நுட்பத்தை வீழ்த்தி வருவது சகஜமே. இந்த நிலையில் சினிமாவுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி சீரியல்கள் புகழ் பெற்று வரும் நிலையில் வெப் சீரீஸ் என்ற இணையதள தொடர்களும் புகழ்பெற்று விளங்குகின்றன.

வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த வெப் சீரீஸ் தற்போது கோலிவுட்டிலும் புகுந்துவிட்டது. பாலாஜி மோகனின் 'As I am Suffering from Kadhal' மற்றும் கவுதம் மேனனின் வெப்சீரீஸ் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் 'விவேகம்' பட நடிகையும் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளுமாகிய அக்சராஹாசன், வெப் சீரீஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து கருத்து கூறிய அக்சராஹாசன், 'இதுவரை நான் எந்த வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. ஆனால் ஒருசிலரிடம் இதுகுறித்து பேசி வருவது உண்மைதான். வெப்சீரீஸ் என்பது லேட்டஸ்ட் டிரெண்ட். இனிவரும் காலங்களில் வெப் சீரீஸ் அதிக அளவில் மக்களிடம் போய் சேரும். அதே நேரத்தில் சினிமாவை வெப்சீரீஸ் பின்னுக்கு தள்ளும் என்று நான் நினைக்கவில்லை. சினிமாவும், வெப்சீரிஸ்களும் இரண்டுமே வருங்காலத்தில் ஒன்றோடு ஒன்று  இணைந்து புகழ்பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்' என்று கூறியுள்ளார்.

More News

விஜய்யின் மெர்சலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறுச்சாமியின் அசத்தலான ஸ்டில்: விறுவிறுப்பான படப்பிடிப்பில் 'சாமி 2'

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அக்டோபர் 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால் அதிரடி

மத்திய அரசு கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் தற்போது கேளிக்கை வரியை உறுதி செய்துள்ளதால்

ஸ்பைடர், கருப்பன் படங்களின் தமிழக வசூல் விபரங்கள்

கடந்த வாரம் வெளியான மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படங்களின் சென்னை வசூல் குறித்த விபரங்களை நேற்று பார்த்தோம்.

விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்: மக்களுக்கு சினேகன் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக கவிஞர் சினேகன் தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவ் எப்படி வெற்றி பெற்றார் என்பது புரியாத புதிராக உள்ளது.