close
Choose your channels

அக்சராவின் அந்தரங்க படங்கள் லீக் விவகாரத்தில் முன்னாள் காதலரிடம் விசாரணை

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அக்சராஹாசன் மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அக்சராஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்வானியிடம் விசாரணை நடப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தனுஜ்-அக்சரா காதலித்து வந்ததாகவும், அந்த சமயத்தில் அக்சரா தனது புகைப்படங்களை தனுஜிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனுஜின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்து கூறியதாவது: அக்சரா தனது புகைப்படங்கள் லீக் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல வருடங்கள் அக்சராவும் தனுஜும் டேட்டிங் செய்தது உண்மைதான். ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து நண்பர்களாக உள்ளார்கள். இருப்பினும் இப்போதும் அவர்கள் இருவரும் நல்லமுறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட ஒருவருடமாகிறது. அக்சரா எதிர்கொண்ட இந்தப் பிரச்னையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ் தயாராக தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.