ஒரே படத்தில் இணையும் கமல்-நாசர் வாரிசுகள்

  • IndiaGlitz, [Thursday,July 12 2018]

கமல்ஹாசனும் நாசரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. சமீபத்தில் 'விஸ்வரூபம் 2' புரமோஷன் விழாவில், 'நாசர், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் செல்லப்பிள்ளை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒரே படத்தில் கமல்ஹாசன் மற்றும் நாசரின் வாரிசுகள் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன் நடிக்கவுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தற்போது நாசரின் இளையமகன் அபி மெக்தி இணைந்துள்ளார்.

ஏற்கனவே 'சைவம்' உள்பட ஒருசில படங்களில் நாசரின் மூத்த மகன் லுத்புதின் நடித்திருக்கும் நிலையில் தற்போது நாசரின் இளையமகன் அபியும் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அக்சராஹாசன், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது அபிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

More News

ரஜினி மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவரது ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருசில குழப்பங்கள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்' ஆரம்பம்: முதல் பலியான முன்னணி ஹீரோ

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் புயல் போல் வீசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புயல் கோலிவுட் திரையுலகை நோக்கி திரும்பியுள்ளது.

ரூ.400 கோடி செலவில் திரைப்படமாகும் 'தாய்லாந்து குகை மீட்பு சம்பவம்

எந்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய நிகழ்வுகள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பதில்லை.

சிம்புவின் சவாலுக்கு அன்புமணியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்று இருந்ததால் அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

வினாயகரை விமர்சித்த வழக்கு: பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக ஆக்ரோஷமாக பொது மேடையில் பேசுவதும் களத்தில் இறங்கி போராட்டம் செய்வதுமாக உள்ளார்.