8 வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட்டை டெலிட் செய்த அக்சயகுமார்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவீட் ஒன்றை தற்போது டெலிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்சயகுமார் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் ’தற்போது சைக்கிள்களை எடுத்து சுத்தம் செய்ய கூடிய நேரம் வந்துவிட்டது என்றும் ஏனெனில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக ஏறி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

எட்டு வருடங்களுக்கு முன் பெட்ரோல் விலை குறித்து அக்சயகுமார் பதிவு செய்த இந்த டுவிட் இன்றைய நிலைக்கு மிகச்சரியாக பொருந்துவதால் டிவிட்டர் பயனாளிகள் அந்த டுவிட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தற்போது வைரல் ஆக்கினார்கள். இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்து அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்

தற்போது மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள அக்சயகுமார் தன்னுடைய பழைய டுவிட்டால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படலாம் என்பதால் அவர் அந்த டுவீட்டை டெலிட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

More News

பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பேருந்தில் இருந்து திடீரென இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா படுத்தும்பாடு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்தில் பயணம் செய்ததை அறிந்ததும் அந்த பேருந்தில் என்ற சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா இருப்பதாக கூறிய டாக்டரை இரும்புக்கம்பியால் அடித்த நபர்: அதிர்ச்சி தகவல்

தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா இருப்பதாக கூறிய டாக்டர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்த நபர் ஒருவரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

7 நாட்களில் கொரோனா பறந்துவிடும்: பாபா ராம்தேவின் புதிய ஆயுர்வேதிக் மருந்து!!!

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல கொரோனா சிகிச்சைக்கே இறுதியான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் உலக மக்கள் திண்டாடி வருகின்றனர்.

கணவரின் கிட்னியை தானம் பெற்ற நபருக்கு 16 வருடங்கள் கழித்து மனைவியும் கிட்னி தானம் செய்த அதிசய நிகழ்வு

அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு முன்னர் கணவரின் கிட்னியை தானமாகப் பெற்ற நபருக்கு அவருடைய மனைவியும் கிட்னி தானம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது