close
Choose your channels

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இருப்பினும் மத்திய அரசு தற்போது பொருளாதார ரீதியில் பெரும் சவாலை எதிர்கொண்டு இருப்பதால் மத்திய அரசுக்கு உதவிடும் வகையில் மக்கள் தாராளமாக தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என சற்றுமுன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் இந்த நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபல பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான நடிகர் அக்ஷய்குமார் கொரோனாவை எதிர்கொள்ள ரூபாய் 25 கோடி நிதியுதவி அளித்து உள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இதுதான் சரியான தருணம். நாட்டு மக்கள் அனைவரும் நம்மால் முடிந்ததை இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பில் இருந்து ரூபாய் 25 கோடியை பிரதமர் நிவாரண நிதியை அளிக்கிறேன் நாம் உயிர்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.