பிரதமர் மோடியிடம் 'டாய்லெட்' குறித்து பேசிய '2.0' நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவரும், சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகருமான அக்சயகுமார் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்பு குறித்து நடிகர் அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் என்னுடைய அடுத்தபடமான 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' படம் குறித்து கூறியதாகவும், இந்த படத்தின் டைட்டிலை கேட்டுவிட்டு பிரதமர் புன்னகை செய்ததாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக பிரதமர் மோடியும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அக்சயகுமார் நடித்து வரும் 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' என்ற திரைப்படம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு?

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன.

'பாகுபலி' பாணியில் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர சாதனை திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மரத்தை சுற்றி டூயட் பாடும் வயதில் நான் இல்லை. ரம்யாகிருஷ்ணன்

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து புகழ் பெற்ற நடிகை ரம்யாகிருஷ்ணன், 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களில் ராஜமாதா சிவகாமி கேரக்டராக வாழ்ந்தார். இந்த படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றார் ரம்யா கிருஷ்ணன் என்றால் அது மிகையில்லை...

'சகலகலாவல்லவர்' டி.ராஜேந்தருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளிலும் ஆரம்பம் முதலே ஈடுபட்டு வரும் சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை. சுப்ரீம் கோர்ட் அதிரடி

கடந்த சில மாதங்களாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் அவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது...