close
Choose your channels

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அக்ஷய் குமாருக்கு காயம் !

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது விபத்துக்குள்ளாகி முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதால் ரசிகர்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.

பாலிவுட் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையேயும் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவருபவர் நடிகர் அக்ஷய் குமார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது “படே மியான் சோட்டே மியான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப், மலையாள நடிகர் பிருத்திவிராஜ், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில் டைகர் ஷெராஃப்புக்கும் நடிகர் அக்ஷய் குமாருக்கும் இடையேயான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சண்டைக் காட்சிக்காக டூப் போடலாம் எனப் படப்பிடிப்புக்குழு பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் அக்ஷய் குமார் பிடிவாதமாகத் தானே அக்காட்சியில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சண்டைக் காட்சியின்போது விபத்து ஏற்பட்டு அவரின் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதையடுத்து ரத்தம் கொட்டியதால் படப்பிடிப்பு குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு என்ன ஆயிற்று என அவருடைய ரசிகர்கள் பலரும் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும் “படே மியான் சோட்டே மியான்“ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தவிர அக்ஷய் குமார் “சூரரைப் போற்று” திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.