close
Choose your channels

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு

Friday, December 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளையும் போலீசார் என்கவுன்டர் செய்து கொலை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி அவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேர் கொடூரமாக உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பெண் எம்பிக்கள் சிலர் குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்றும், உடனடியாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றும் ஆவேசமாக பேசினார்

இந்த நிலையில் சற்று முன்னர் கொலையாளிகள் நால்வரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது திடீரென நான்கு பேர்களும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் அவர்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

கொலையாளிகள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பெரும்பாலான சமூக வலைதள பயனாளிகள் வரவேற்பும், ஒருசிலர் மட்டும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.