பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளையும் போலீசார் என்கவுன்டர் செய்து கொலை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி அவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேர் கொடூரமாக உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பெண் எம்பிக்கள் சிலர் குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்றும், உடனடியாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றும் ஆவேசமாக பேசினார்

இந்த நிலையில் சற்று முன்னர் கொலையாளிகள் நால்வரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது திடீரென நான்கு பேர்களும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் அவர்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

கொலையாளிகள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பெரும்பாலான சமூக வலைதள பயனாளிகள் வரவேற்பும், ஒருசிலர் மட்டும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

More News

15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.

ராஜஸ்தான் மாநிலம்  சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பீமாராம் தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்துள்ள்ளான்

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை மளிகை கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..!

உடல் தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கும் நிலையில், உடல் தானம் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களை வைத்து அந்த உறுப்புகளை மற்றொருவருக்கு

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..! ட்ரென்டிங் வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-ய

2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஷஹலா ஷெரின் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது