close
Choose your channels

அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:

தலைவர் படத்துக்கு மியூசிக் என்பது எனது வாழ்நாள் கனவு. அது இரண்டாவது முறை நடந்துள்ளது. என்னை நம்மிய இயக்குநர்களுக்கு நன்றி.

நான் ‘3’ படத்திற்கு பின்னர் சின்ன படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த போது எனக்கு ’கத்தி’ என்ற மிகப்பெரிய படத்தை கொடுத்து எனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள். தற்போது தலைவர் அவர்களின் படத்திற்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

தர்பார் படத்தின் ஆல்பம் மிக சிறப்பாக வந்ததற்கு முக்கிய காரணம் பாடலாசிரியர் விவேக். சும்மா கிழி’ பாடல் உள்பட அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக எழுதியுள்ளார். அவருக்கும் எனது நன்றிகள் ஒவ்வொரு பாடலையும் நாங்கள் ரசித்து ரசித்து நாங்கள் ஒலிப்பதிவு செய்தோம். ஒலிப்பதிவு செய்து முடித்தவுடன் எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் ஒரு ஆனந்த கண்ணீரை நாங்கள் பார்த்தோம். இந்த உணர்வு ஏன் வந்தது என்றால் உலகத்திலேயே ஒரு மிகச் சிறந்த நடிகருக்கு நாமும் பாடல் கம்போஸ் செய்து இருக்கிறோம் என்ற உணர்வு தான்

இந்த பொங்கல் அனைவருக்கும் ட்ரீட் ஆக நிச்சயம் இருக்கும். கடைசியாக அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.