இந்திய அணியை கதறவிட்ட இளம் வீரர்… யார் இந்த  ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றிருக்கும். ஆனால் நியூசிலாந்து இளம் வீரர் ஒருவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியதோடு வெற்றியையும் இழக்க வேண்டியிருந்தது. அந்த நபரின் பெயர்தான் ரச்சின் ரவீந்திரா.

22 வயதான ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை இந்திய வீரர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். இவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல்தான் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து டிரா செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் “ரச்சின் ரவீந்திரா“ எனும் பெயர் குறித்து ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து வீரராக இருந்தாலும் அவர் அடிப்படையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூரை சேர்ந்த ரவி கிருஷ்ணன் தம்பதிகள் கடந்த 90 களில் ஆர்க்கிடெக்ட் சிஸ்டம் எனும் நிறுவனத்துடன் இணைந்து நியூசிலாந்தில் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 1999 இல் பிறந்தவர் ரச்சின். ரவி கிருஷ்ணன் ஏற்கனவே பெங்களூருவில் இருந்தபோது கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். இவர் ஸ்ரீநாத்துடன் நெருக்கமான உறவுடன் இருந்து வந்துள்ளார்.

மேலும் தனக்கு கிரிக்கெட் வீரர் ராகுல் மற்றும் சச்சின் மீதுள்ள பற்றின் காரணாக தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டின் பெயரில் உள்ள “ரா“வையும் சச்சின் பெயரில் உள்ள “சின்“னையும் இணைந்து ரச்சின் ரவீந்திரா எனப் பெயர் வைத்துள்ளார். மேலும் நீயூசிலாந்தில் ஹட் ஹாக்ஸ் எனும் பெயரில் அகாடமியையும் நடத்தி வருகிறார். இந்த அகாடமியில் பயிற்சி பெற்று ரச்சின் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் ரச்சின் ஹட் ஹாக்ஸ் அணிக்காக இந்தியாவில் பலமுறை கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இதனால் இந்தியக் கிரிக்கெட் பிட்ச் எப்படி இருக்கும் என்பது வரைக்கும் ரச்சினுக்கு அத்துபடியாக இருக்கிறது. மேலும் ரச்சின் இளம் வயதிலேயே பல சாதனைகளுடன் அண்டர் 19 நியூசிலாந்து கிரிகெட் அணியின் முக்கிய வீரராக இருந்துவந்துள்ளார் மேலும் அந்த அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிஇருக்கறார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் அண்டு பங்களாதேஷ்க்கு எதிரான டி20 போட்டியில் களம் இறங்கினார். அந்தப் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த போட்டியில் 4 ஓவருக்கு 22 ரன்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்துக்கான சர்வதேசப் போட்டியில் விளையாடிவரும் இவர் இதுவரை 29 போட்டிகளில் 1,626 ரன்களை குவித்திருப்பதோடு 3 சதம் 10 க்கும் மேற்பட்ட அரைச் சதத்தை வீழ்த்தியிருக்கிறார்.

இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடி நியூசிலாந்துக்கு டிரா செய்யும் வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளார். இதனால் ஒரே நாளில் உலகம் முழுவதும் கவனம் பெற்ற வீரராகவும் அவர் மாறியிருக்கிறார். இதனால் ரச்சின் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதோடு ராகுல் டிராவிட் மற்றம் சச்சின் பெயரை காப்பாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாலையில் நடந்துசென்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி… அதிர்ச்சி தகவல்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் நிகிதா தத்தா சாலையில் நடந்து சென்றபோது

ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஜெயில்' மற்றும் 'பேச்சுலர்' ஆகிய திரைப்படங்கள்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படைப்பு: முக்கிய வேடங்களில் இரு பிரபலங்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படைப்பில் இரண்டு பிரபலங்கள் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை

அபிஷேக் முகத்தில் பேப்பரை தூக்கியெறிந்த சிபி: ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி மற்றும் புளூ டிவி என இரண்டு அணிகள் பிரிந்து ஒவ்வொரு அணியில் உள்ளவர்கள்

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே! 'மாநாடு' வெற்றிக்கு நன்றி தெரிவித்த யுவன்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு, எஸ்ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் ஆகியோர்