close
Choose your channels

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்கள்: தமிழ் நடிகை ஆவேச கருத்து

Wednesday, March 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்கு சாதகமாக அரசியலாக்கி வரும் நிலையில் உண்மையான கொதிப்புடன் கருத்து கூறி வருபவர்களில் திரையுலகினர்களும் சிலர் என்பது தான் உண்மை

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷ், சித்தார்த், பார்த்திபன், பா.ரஞ்சித், சத்யராஜ் உள்பட பலர் தங்களுடைய ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது 'அங்காடி தெரு' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை சிந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நாய்களை உடனடியாக தண்டியுங்கள். மற்ற நாடுகளில் இருப்பது போன்று நடுரோட்டில் இதுமாதிரி ஜென்மங்களை துண்டு துண்டாக வெட்டும் தண்டனையை இந்தியாவுக்கு கொண்டு வாங்க

மும்பை, ஐதராபாத் மாதிரி தமிழ்நாட்டிலும் விபச்சாரத்தை சட்டபூர்வமாக கொண்டு வாங்க!, இப்ப எந்த இடத்தில விபச்சாரம் நடக்காம இருக்கு? அதை சட்டபூர்வமா கொண்டு வந்துட்டா, இதுமாதிரி கேவலமான ஜென்மங்கள் இச்சையை அங்கே போய் தீர்த்துக்குவாங்க. நல்ல பெண்கள் ஓரளவு பாதுகாக்கப்படுவார்கள். கலாச்சாரம், வெங்காயம் இதையெல்லாம் பார்க்காமல் உடனே விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்க

பெண்கள் மேலயும் தப்பு இருக்கு. உங்களை வளர்த்து ஆளாக்குன பெத்தவங்க, உங்களுக்கு திருமணம் செஞ்சு வைக்க மாட்டாங்களா? இந்த மாதிரி கேடுகெட்ட நாய்ங்க கூப்பிட்டங்கன்னு அவங்க கூட பங்களாவுக்கு போகலாமா? அறிவில்லையா? இனிமேலாவது திருந்துங்கடி

விஜய் ஒரு படத்துல சொன்னதுபோல் இந்த செய்தி ஒருவாரம் பரபரப்பா போகும். சமூக வலைத்தளங்களில் ஷேர் பண்ணிட்டு அடுத்த் செய்திக்கு போயிட்டு, இதை மறந்துடுவோம், இந்த விஷயத்தில அது நடக்கக்கூடாது. எது எதுக்கோ போராடுறிங்க, இதுக்கு எல்லாரும் சேர்ந்து போராடுங்களேன்

இவ்வாறு நடிகை சிந்து கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.