இரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘புஷ்பா’திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் ஆகஸ்ட் மாதமும் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு உள்பட பான் - இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சுடன் நடந்து வந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாகவும் விரைவில் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. சுமார் 270 கோடி ரூபாய் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர் கூறியதாவது, நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம், என்று தெரிவித்தனர்

More News

உலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருப்பார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்

ஞானதந்தையை இழந்து விட்டேன்: நடிகர் சிவகுமார் உருக்கம்!

பிரபல தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து ஒரு ஞான தந்தையை நான் இழந்து விட்டேன் என நடிகர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்

ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக! எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாஅல் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக பலரும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்

சமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்'காத்துவாக்குல ரெண்டு காதல்'