close
Choose your channels

அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குவது தமிழின் பிரமாண்ட இயக்குனரா?

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாகவும் இதனை அடுத்து தற்போது ஓடிடியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ’புஷ்பா’ திரைப்படம் ரிலீஸாகி ஒரு மாதம் கழித்து மீிண்டும் 50 திரையரங்குகளில் தமிழகத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ’மெர்சல்’ ‘தெறி’ மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’கிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லீ சொன்ன கதை அல்லு அர்ஜூனனுக்கு பிடித்து விட்டதால் அவருடைய அடுத்த பட இயக்குனர் அட்லீ தான் என்று திரையுலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து வருகிறது. அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ பான் - இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் அட்லியுடன் இணையும் படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.