இந்தியா முழுக்க 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா? சென்னை, கோவைக்கும் வாய்ப்பா?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதோடு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 ஆவது நாளாக 3 லட்சத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அதிக பாதிப்பு உள்ள 150 மாவட்டங்களில் முழுபொது ஊரடங்கினை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர்மட்ட அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டவுடன் 15% அதிகப் பாதிப்பு உள்ள இந்தியாவின் 150 மாவட்டங்களில் முழுபொது ஊரடங்கு கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இப்படி 15% அதிகப் பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாவட்டங்களின் வரிசையில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு போன்ற தமிழக மாவட்டங்களும் அடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பல கடுமையான விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன

தமிழகத்தில் இத்தகைய விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போதே தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் 15% அதிக பாதிப்பு உள்ள 150 மாவட்டங்களுக்கு முழுபொது ஊரடங்கு அமல்படுத்த உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதுதவிர வரும் மே 1,2 ஆகிய தேதிகளில் முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்து வருகிறது

More News

ஓடிடியில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 திரைப்படங்கள்: பணிகள் மும்முரம்!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு 'உனரு' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு மத்திய அரசு செய்ய போகும் மரியாதை!

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது 

படுக்கை காலி இல்லாததால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த 16 மாத குழந்தை: பெற்றோர் கதறலின் பரிதாப வீடியோ!

மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்பதால் 16 மாத குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த அந்த குழந்தை பரிதாபமாக

சமரச பேச்சுவார்த்தை என்ன ஆச்சு? மீண்டும் நீதிமன்றம் செல்லும் 'இந்தியன் 2' வழக்கு!

'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் இறந்தவர் உடலை வாங்க மறுக்கும் உறவுகள்...! உதவிக்கரம் நீட்டும் இஸ்லாமிய அமைப்புகள்...!

கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்ததால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடல்களை அடக்கம் செய்து வருகின்றன.