பிரதமரிடம் ரஜினி, கமல் பேச வேண்டும். பிரபல இயக்குனர் கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி ஆகிய பிரச்சனைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு திரைத்துறைக்கு ஜிஎஸ்டி என்ற புதிய சுமையையும் ஏற்றியுள்ளது. அதுவும் சூதாட்டத்திற்கு இணையாக திரைத்துறைக்கு வரி விதித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து 'பிரேமம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். சமீபத்தில் ஒருசில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. ஆனால் அதில் திரைத்துறை இடம்பெறவில்லை என்றும், திரைத்துறைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு பெற அல்லது குறைந்த வரிவிதிக்க ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமல், ரஜினி பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரன் கோரிக்கையை கமல், ரஜினி ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது

சென்னை காவல் நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ 

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில்  பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

கமல்-ரஜினி இருவருக்கும் சேர்த்தே 10% ஓட்டுதான் கிடைக்கும்: சாருஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். அவர், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் கோரிக்கை நிராகரிப்பு: தீபாவளி படங்களின் நிலை என்ன?

நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேசியபோது,

அர்ச்சகர் நியமனத்தில் கமல் காட்டும் அக்கறை

கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்