கோபிகா என கூப்பிட்டால் அந்த பொண்ணு அவ்வளவுதான்....! காமக்கொடூரன் பாபா-வின் லீலைகள்....!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், சிவசங்கர் பாபா செய்த லீலைகள் குறித்து பேசியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் பாபா தன்னையே கிருஷ்ணனாக பாவித்துக் கொள்கிறார். அங்கு பள்ளியில் பயிலும் மாணவிகளை கோபிகாக்கள் என்றும் அழைக்கிறார். பாபா வாயை திறந்து மாணவிகளை கோபிகா என அழைத்துவிட்டால் போதும், அவர்களை பாலியல் வன்புணர்வு செய்யாமல் விடமாட்டார். அதிலும் குறிப்பாக சிங்கிள் மதர் உள்ள பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் மற்றும் பயந்த சுபாவம் உள்ளவர்களைத்தான் குறிவைப்பார்.

அவர்களிடம் நான் தான் உன் அப்பா, நான் தான் உன் பாய்பிரண்ட், நான் தான் உன் கணவன் என்று கூறி, இளம் மாணவிகளை மூளைச்சலவை செய்து விடுவான். பாபுவுடன் டேட்டிங் செல்ல வேண்டுமென்றால், அதற்காகவும் தனியாக கிளாஸ் எடுக்கிறார்கள். தன்னுடைய லாஞ்சிற்கு அழைத்து சென்று குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் மற்றும் மதுபானங்களை குடிக்க தருவார். அந்த இடம் மிகவும் கலர்புல்லாக இருக்கும், மாணவிகளுக்கு பிறந்தநாள் என்றால் விலையுயர்ந்த கிப்ட்களையும், ஆடைகளையும் பரிசாக கொடுப்பார்.

சும்மா ஒரு சிப் குடித்து பார் என பள்ளி மாணவிகளிடம் மதுவை குடிக்க சொல்லி வற்புறுத்துவார். இதையெல்லாம் நான் பார்த்ததில்லை, ஆனால் சில பெண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது பற்றி நான் பள்ளியை எதிர்த்து கேள்வி கேட்டபோது, பெற்றோரோரிடம் குறைந்த மதிப்பெண் தான் வாங்கியுள்ளேன், நான் படிக்காத மாணவி என எனக்கு டிசி கொடுத்துவிட்டார்கள். இதை நிரூபிக்கும் வகையில் நான் மற்றொரு பள்ளியில் சேர்ந்து டாப்பர் மாணவியாக என்னை வெளிக்கொண்டு வந்தேன்.



பாபாவை தவிர அங்குள்ள யாரும் மாணவிகளை தவறாக நடத்தவும் மாட்டார்கள், பாலியல் வன்புணர்வும் செய்ய மாட்டார்கள். ஆனால் அங்குள்ள ஆசிரியைகளே பாபுவிடம், பெண்களை அழைத்துச்செல்வார்கள். ஒரு பெண் தனக்கு பிரச்சனைகள் இருப்பதாக பாபா-விடம் கூறியுள்ளார். அப்போது உனக்காக நான் இருக்கிறேன் என்று, அப்பெண்ணின் அந்தரங்க இடங்களில் தொட்டும், முத்தமிட்டும் உள்ளார். ஆனால் மாணவி அந்த இடத்தை விட்டு எழுந்து அழுதுகொண்டே வந்ததாக என்னிடம் புலம்பினார். இதையறியாமல் பல பெற்றோர்களும், அவர்களின் குழந்தைகளை இங்கு சேர்க்கிறார்கள், இச்சை எண்ணம் கொண்ட பாபாவை கடவுள் என நம்புகிறார்கள். பலரும் தெரிந்தே மாணவிகளை அங்கு தங்க வைப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது என அந்த மாணவி கூறினார்.

More News

ஆதாரம் இல்லாமல் அச்சுறுத்தாதீங்க… சீன பெண் விஞ்ஞானியின் உருக்கமான பதிவு!

சீனாவின் தேசிய வைராலாஜி நிறுவனத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி ஷி ஜெங்லி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

மகளின் வீடியோவில் 'ஆனந்த யாழை' இணைத்த யுவன்: வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது என்பதும் 'தங்க மீன்கள்' என்ற படத்திற்காக இடம்பெற்ற

மூன்று மாதமாக காத்திருந்த ரசிகர்....! யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் ...!

தொடர்ந்து மூன்று மாதங்களாக யுவனின் போஸ்டுகளுக்கு ரிப்ளை செய்து வந்த ரசிகர்கருக்கு, யுவன் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

'பிகில்' நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் 'எப்ஐஆர்' 'மழையில் நனைகிறேன்'

லெஜண்ட் சரவணனின் ஜோடி இப்போ சேரு பூசின பாடி: வைரல் புகைப்படம்!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்