close
Choose your channels

எங்கள் வீட்டின் மகாராணி: பாட்டி மறைவு குறித்து ஜிவி பிரகாஷ்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் சற்று முன்னர் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரை உலகையே வருத்தமடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் ஏஆர் ரஹ்மான் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது பாட்டியின் மறைவு குறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் ’அவர் எப்போதுமே எங்களுடைய மகாராணி’ என்று குறிப்பிட்டு கரீமா பேகம் அவர்கள் மகாராணி போன்று உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அடுத்து ஜீவி பிரகாஷின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.