கேரளாவில் பிரபல தமிழ் நடிகை சென்ற கார் விபத்து

  • IndiaGlitz, [Saturday,December 26 2015]

தலைநகரம், சபரி, பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305-ல் கடவுள், உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஜோதிர்மயி. இவர் தனது கணவருடன் கேரளாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியதாகவும், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


கேரளாவில் உள்ள கொங்கிபள்ளி என்ற தேசிய நெடுஞ்சாலையில் நடிகை ஜோதிர்மயி தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த பஸ் இவர்கள் சென்ற கார் மீது மோதியதால் விபத்துக்குள்ளாகியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் அவரது கணவர் அமல்நீரத் ஆகிய இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜோதிர்மயி தம்பதிகளை வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை ஜோதிர்மயி கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் அமல்நீரத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நேற்று மால்கே என்ற பகுதியில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜீத்துக்கு ரஜினி தரும் பிறந்தநாள் பரிசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

ஜெயம் ரவியுடன் முடியும் 2015, பரத்துடன் ஆரம்பிக்கும் 2016

2015ஆம் ஆண்டின் ஹீரோ யார்? என்றால் திரையுலகை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் சொல்லும் நடிகரின்...

'2.0' படக்குழுவினர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 2.0' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது என்பது அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார்களுக்கு இடையே ஜொலித்த அடுத்த நிலை ஹீரோக்கள்

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பெரிய நடிகர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருவரின் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வரும்போது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஒரு திருவிழாபோல் கொண்டாடுவார்கள்....

வில்லனாக நடிக்க ஆசைப்படும் மற்றொரு பிரபல ஹீரோ

கோலிவுட்டின் இளம் நாயகர்களில் ஒருவரான விமல் நடிப்பில் முடிவடைந்துள்ள 'அஞ்சல' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...