அடிமுறை'யை அடுத்து 'க்ராவ் மஹா': நடிகைகளின் ஆக்சன் அவதாரம்

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

சமீபத்தில் வெளிவந்த ’பட்டாஸ்’ திரைப்படத்தில் அடிமுறை என்ற தற்காப்புக் கலையை சினேகா முறைப்படி பயின்று அதில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருந்தார் என்பதை பார்த்தோம். அதேபோல் தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்திலும் மாளவிகா மோகனன் முறைப்படி சண்டை பயிற்சி பெற்று அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார் என்பதும் விஜய்சேதுபதியுடன் மாளவிகா மோகனன் மோதும் ஒரு சண்டைக்காட்சி மாஸ்டர் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அமலாபால் நடித்து முடித்துள்ள ’அதோ அந்த பறவை’ என்ற திரைப்படத்தில் அமலாபாலுக்கு ‘க்ராவ் மஹா’என்ற சண்டைப் பயிற்சியை முறைப்படி பயிற்சி அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது உயிரை பணயம் வைத்து நடிகை அமலாபால் நடித்துள்ள இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு படத்தின் நாயகி என்றால் பாடலுக்கு மட்டும் வந்து போகும் கேரக்டர்களில் நடிக்காமல் அதிரடி ஆக்ஷனிலும் தற்போதைய நடிகைகள் கவனம் செலுத்தி வருவது கோலிவுட் திரையுலகம் ஆரோக்கியமான வழியில் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.
 

More News

ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து!

சென்னையில் ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஒருவரின் தலைமுடி திடீரென வெட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்!

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் லெஜண்ட் அருள் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும்

'வாரணம் ஆயிரம்' சூர்யா போல் மீண்டு வந்த விஷ்ணுவிஷால்: ஒரு உருக்கமான பதிவு

வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2018 ஆம் ஆண்டு 'ராட்சசன்'

யோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரும் தற்போதைய மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருபவருமான யோகிபாபு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி நல்லவர், வாய் தவறி கூறியிருப்பார்: பிரபல அரசியல்வாதி விமர்சனம்

சமீபத்தில் நடைபெற்றது துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ஒரு சில கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.