close
Choose your channels

தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த பாலியல் புகார்: சென்னை ஐகோர் அதிரடி உத்தரவு

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவல்துறையில் புகார் கொடுத்தார். அமலாபாலின் இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தங்கள் மீது அபாண்டமாக பொய் புகார் கூறியதாக தொழிலதிபர் அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். மேலும் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.