தனுஷ்-அமலாபால் படப்பிடிப்பு முடிந்தது

  • IndiaGlitz, [Tuesday,February 23 2016]

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வரும் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தரமான படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தயாரித்த 'காக்கா முட்டை' மற்றும் 'விசாரணை' படங்களே இதற்கு சாட்சி


இந்நிலையில் இந்த வரிசையில் தனுஷ் தயாரித்து வரும் இன்னொரு படம் 'அம்மா கணக்கு'. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரேவதி, அமலாபால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Nile Battey Sannatta என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் படமான இந்த படம் அம்மா -மகள் உறவை உணர்ச்சிகரமாக விளக்கும் படம். இந்தியில் இந்த படத்தை இயக்கிய அஸ்வின் ஐயர், தமிழ் ரீமேக் படமான 'அம்மா கணக்கு' படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாகும் என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

ரஜினி-கமலுடன் இணைந்த சசிகுமார்

தாரை தப்பட்டை படத்திற்கு பின்னர் குறுகிய காலத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முடிந்த சசிகுமார் திரைப்படம் 'வெற்றிவேல்'...

சென்னை கிரிக்கெட்டில் இணைந்தார் சன்னிலியோன்

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோனின் ஃபேவரேட் விளையாட்டு கால்பந்து எனினும் அவர் தற்போது சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளர் ஆகியுள்ளார்...

தேர்தல் கமிஷனுக்கு நடிகர் சங்கம் வைத்த கோரிக்கை மனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவித்தலைவர் பொன்வண்ணன் தலைமையிலான குழு இன்று தமிழக தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம்மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் உறுதிசெய்தார்...

பீப் பாடலை இயற்றியது ஏன்? போலீஸாரிடம் சிம்பு விளக்கம்

கடந்த டிசம்பர் மாதம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீதும் கோவை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது....