நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,August 13 2022]

அமலாபால் நடித்து தயாரித்த ’கேடவர்’ என்ற திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பெற்றதையடுத்து அவர் மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் நடித்த ’கேடவர்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வாரம் ரிலீசான படங்களில் தரவரிசை குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதில் அமலாபால் நடித்த ’கேடவர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் அருண் விஜய் நடித்த ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடர், மூன்றாவது இடத்தில் ’யானை’ நான்காவது இடத்தில் ’விருமன்’ படங்கள் பெற்று உள்ளது.

இந்த வாரம் ரிலீசான படங்களில் முதலிடத்தை ’கேடவர்’ படம் பெற்றது எடுத்து நடிகை அமலாபால் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். ’கேடவர்’ திரைப்படத்தில் பத்ரா என்ற கேரக்டரில் மிகவும் சூப்பராக அமலாபால் நடித்திருக்கிறார் என்பதும் அதுல்யா ரவியை கொலை செய்து அவரது இதயத்தை திருடி இன்னொருத்தருக்கு பொருத்தும் மோசடியை வெளிப்படுத்தும் உடற்கூறு ஆய்வாளராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா- கார்த்தி படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த ஐடியா தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்ததாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதற்கான

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்: ரஜினிகாந்த் சுதந்திர தின வாழ்த்து

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடியின் கோரிக்கையின்படி

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் 'பொன்னி நதி' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் வீடியோ

 பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

நகைகள் மட்டுமே மேலாடை... பிக்பாஸ் நடிகையின் அரை நிர்வாண போட்டோஷூட்!

நகைகளை மட்டுமே மேலாடையாக அணிந்து பிக்பாஸ் நடிகை ஒருவர் பதிவு செய்துள்ள அரைநிர்வாண போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த 3 கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது:  தேசிய விருது பெற்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் கடிதம்!

 அந்த மூன்று கேரக்டர்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது என தேசிய விருது பெற்ற இயக்குனர் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.