close
Choose your channels

அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா? வெளியான ஆதாரங்களால் பரபரப்பு

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பாடகர் பவ்நிந்தர்சிங் மீது விழுப்புரம் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடைய நண்பர் பவ்நிந்தர் சிங் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் பணம் பறிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாடகர் பவ்நிந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பவ்நிந்தர்சிங் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த போது தனக்கும் அமலாபாலுக்கும் நடந்த திருமணம் குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பவ்நிந்தர் மற்றும் அமலாபால் ஆகிய இருவருக்கும் பஞ்சாப் முறைப்படி திருமணம் நடந்தது என்றும், இருவரும் கடந்த சில வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்தனர் என்றும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் மீது காழ்ப்புணர்ச்சியால் பவ்நிந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளார் என்றும் அவருடைய வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் பவ்நிதர் சிங்கிற்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கியுள்ளது

பவ்நிந்தர் - அமலாபால் திருமணம் நடந்த தேதி, திருமணம் நடந்த இடம் ஆகிய ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.