டிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்!

  • IndiaGlitz, [Tuesday,August 04 2020]

வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவின் செயலியான டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட ஒரு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனம் ஏதாவது ஒன்றுக்கு டிக்டாக் செயலியை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெள்ள அவர்கள் கூறியபோது டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க தயாராக உள்ளதாகவும் இது குறித்து டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த பேச்சுவார்த்தை முடிந்து விடும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக் டாக் சேவையை மைக்ரோசாப்ட் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து!

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

மாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு

கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களுக்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் காமன் டிபி போஸ்டர் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ!!!

கால்பந்து உலகின் ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரோனால்டோ கார்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்.

எகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா??? புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்!!!

விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எலான் மஸ்க்

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சினம்'.இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்துவிட்