தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் தாங்கள் தங்கும் ஹாஸ்டலிலேயே திருமணம் செய்துகொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மும்பையில் உள்ள சியான் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 29 வயது ரிம்பி நிஹாரியா மற்றும் 30 வயது சார்ஜேரோ ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மயக்க மருந்து நிபுணர்களான இவர்கள் இருவரும் தங்களுடைய மேல் படிப்பு முடிந்ததும் மே மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடைய இறுதியாண்டு தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் மருத்துவர் தினமான ஜூலை ஒன்றாம் தேதி அன்று திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். தாங்கள் ஆடம்பரமான திருமணத்தை விரும்பவில்லை என்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறிய இந்த காதலர்கள், தாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் உள்ள ஏழாவது மாடியிலேயே திருமணம் செய்து கொண்டனர்

இந்த திருமணத்தில் சார்ஜேரோ தந்தை, ஒரு சில உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் என இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இந்த தம்பதிகளுக்கு அவர்களுடைய உறவினர்கள் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்ததும் ஸ்பெஷல் உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

More News

கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர்

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி

ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது

50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில்

பீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது