close
Choose your channels

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலை ஏற்பட்டு உள்ளது. இத்தகைய குற்றங்களைக் களைவதற்காக அம்மாநில முதல்வர் சென்ற வாரம் கடுமையான விதிமுறைகளையும் கொண்டு வந்தார். இந்நிலையில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 4 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தால் இளம்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்குமுன் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர் பட்டியலினப் பெண் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்டது எனப்பல குற்றச்சாட்டுகள் முன்வைக்ககப்பட்டன. இச்சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில் தற்போது உத்திரப்பிரதேசத்தில் அடுத்த கூட்டுப்பாலியல் சம்பவம் நடைபெற்று இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்ராம்பூர் மாவட்டத்தில் வேலைக்குச் சென்று திரும்பிவந்த 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்து இருக்கிறார். இதனால் அம்மாநிலத்தில் மேலும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பாக சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இச்சம்பவத்திற்கு அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.