எந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது? ஐசிசியை கேலி செய்த அமிதாப்!

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்களை எடுத்தது. இதனையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி இங்கிலாந்து என்பதால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் சர்ச்சைக்குரியதாக சுட்டிக் காட்டி வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒருவரிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு உள்ளது. இன்னொருவரிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு உள்ளது. நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு 5கள் மற்றும் 8 ஜீரோக்கள் உள்ளது. ஒரு 2000 நோட்டு வைத்திருப்பவரிடம் ஒரே ஒரு இரண்டு மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளது. எனவே நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரே பணக்காரர் என ஐசிசி முடிவு செய்துள்ளது என்று ஒரு கிண்டலான டுவீட்டை பதிவு செய்து ஐசிசியின் விதியை கேலி செய்துள்ளார்.
 

More News

A1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்

நடிகர் சந்தானம் நடித்த 'A1 ' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசரில் பிராமண சமுதாய பெண்கள் குறித்து சர்ச்சை காட்சிகள் இருப்பதாக குற்றஞ்ச்சாட்டப்பட்டு

நடிகர் விவேக் தாயார் காலமானார்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் என்பவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86

சூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 

சூர்யாவுக்கு துணை நிற்போம்: ரஜினி பட இயக்குனரின் டுவீட்

சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த பேச்சுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் நேற்று கமல்ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்தார்.

நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்: கவினிடம் சாக்சி கறார்

பிக் பாஸ் வீட்டில் சாக்சியும் கவினும் கடந்த சில நாட்களாக நெருக்கமாக இருந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே திடீரென முட்டிக்கொண்டது.