ரஜினியுடன் முதலமைச்சர் மனைவி திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக சில கருத்துக்களை கூறினார். அதுமுதல் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியை அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் அவ்வப்போது சந்தித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் 'காலா' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றார். ஒருபக்கம் படப்பிடிப்பில் கவனம் செலுத்திய போதிலும், மும்பையில் இருந்து கொண்டே பிரபல தேசிய, மற்றும் மாநில அரசியல் தலைவர்களுடன் இன்னொரு பக்கம் அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் அவர்கள் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வங்கியில் பல வருடங்கள் பணிபுரிந்த அனுபவமுள்ள அம்ருதா ஒருசிறந்த பாடகியும், சமூக சேவகியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை தந்ததாகவும், இந்த சந்திப்பின்போது சமூக பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசியதாகவும் அம்ருதா ஃபட்னாவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இன்னும் ஒருசில மாதங்களில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மாநில முதலமைச்சரின் மனைவி அவரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தனுஷின் 'விஐபி 2': டீசர் விமர்சனம்

தனுஷ், அமலாபால், நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைக்காத பெருமையை பெற்ற ஜிப்ரான்

சமீபத்தில் மரணம் அடைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் மிகப்பெரிய கவிஞராக அனைவராலும் போற்றப்படும் வகையில் இருந்தாலும் அவர் திரைப்படத்திற்கு இதுவரை ஒரு பாடல் கூட எழுதவில்லை.

ஆட்டுக்குட்டியின் பசிக்காக ரூ.66,000ஐ இழந்த பரிதாப நபர்

பொதுவாக ஒரு ஆட்டுக்குட்டியின் பசியை போக்க ரூ.50 அல்லது ரூ.100க்கு புல் வாங்கி போட்டாலே போதும்.

ஒரே படத்தில் காஜல்அகர்வால் - எமிஜாக்சன்

ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று நடிகைகள் இணைந்து நடிப்பது கோலிவுட் திரையுலகில் சகஜமான ஒன்றே.

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் 9 வயது நண்பர் இவர்தான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனிமையை விரும்புபவர் என்பதும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி மிகச்சிலரே இருக்கின்றனர் என்பதும் கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இந்த நிலையில் மணிரத்னம் அவர்களுக்கு 9 வயதில் ஒரு நண்பர் இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அவர்தான் பிரபல ஒளிப&