நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். எமிஜாக்சன் பூரிப்பு

  • IndiaGlitz, [Wednesday,April 13 2016]

விஜய் நடித்த 'தெறி' படத்தில் நடித்து முடித்துவிட்ட எமிஜாக்சன் நாளை இந்த படம் கொடுக்கப்போகும் ரிசல்ட்டை அறிய ஆவலுடன் உள்ளார். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் '2.0' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


இதுகுறித்து எமிஜாக்சன் சமீபத்தில் கூறியபோது, 'இந்தியாவுக்கு வந்தது முதல் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர்களுடன் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். அந்த இரண்டு ஆசைகளும் தற்போது நிறைவேறிவிட்டது. எனவே இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்' என்று கூறினார்.

மேலும் '2.0' பட அனுபவம் குறித்து அவர் கூறியபோது, '2.0' படத்தில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. சென்ற வாரம் ரஜினி-அக்ஷயகுமாரின் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். இந்த படத்தில் நான் ரோபோவாக நடிக்கவில்லை' என்று கூறினார்.

More News

அந்த கதையும் என்னுடையதுதான். பாலாவுக்கு ரத்னகுமார் பதில்

பாரதிராஜாவின் கனவுப்படம் என்று சொல்லப்படும் 'குற்றப்பரம்பரை' படத்தை பாலா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் பாலா மற்றும்...

'தெறி'யில் மேலும் ஒரு விஐபி? இதுவரை வெளிவராத சஸ்பென்ஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் இன்று இரவே ஒருசில நாடுகளிலும், நாளை அதிகாலை முதல் இந்தியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

'தெறி'யின் பாசிட்டிவ்கள் என்னென்ன? அட்லி விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது...

இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தெறிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நேற்று சென்சார் ஆகி 'யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில்...