லாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

 

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார் தெரசா சொரியானோ மஸ்க்கோஸ் என்ற பெண்மணி. இவர் ஒரு கட்டிடக்கலை வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கட்டிக்கலை மற்றும் கலாச்சாரப் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்காக இவர் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளார். தனது தோழியுடன் வந்த இவர் தோழியை மும்பையில் விட்டுவிட்டு கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் குண்டப்பூர் என்ற கிராமத்தில் உள்ள தனது அண்ணனின் தோழர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அந்நேரத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கில் அவர் அங்கேயே தங்கவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

இதற்காக துளியும் வருத்தப்படாத தெரசா குண்டப்பூர் கிராமத்தில் மேற்கொள்ளும் இயற்கை விவசாயத்தை அந்த விவசாயிகளுடன் ஒன்றாக இணைந்து கற்றுக் கொண்டிருக்கிறார். இந்திய விவசாயம் மட்டுமல்லாது, உணவு வகைகள், நெசவு முறைகள் என அனைத்தையும் அந்த மக்களோடு இணைந்து குதூகலமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். ஏன் 4 மாதங்களுக்குப்பிறகு ஓரளவிற்கு கன்னடத்தையும் இவர் கற்றுக் கொண்டாராம். சிக்கன் சுக்கா, இட்லி சாம்பார், மீன்கறி இப்போது தெரசாவிற்கு விருப்பமான உணவாகவும் மாறிப்போயிருக்கிறது.

இந்திய முறையிலான இயற்கை விவசாயத்தை முற்று முழுதாகக் கற்றுத்தேர்ந்த இவருக்கு பால்கறக்கவும், நெல் நடவும், வேர்கடலை அறுவடை செய்யவும் அங்குள்ள மக்கள் கற்றுக் கொடுத்தாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள தெரசா நான் லாக்டவுனில் மாட்டிக் கொண்டதைக் குறித்து கொஞ்சமும் வருத்தப்படவில்லை. இயற்கை விவசாயம், கலாச்சாரம், உணவுமுறைகள் அனைத்தையும் என்னால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. இந்தியாவின் நகரப் பகுதிகளைவிட கிராமம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த வாரம் கோவா சென்ற தெரசா அங்கிருந்து ஸ்பெயினுக்கு பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா மக்களிடையே கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இதுபோன்ற நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறது.

More News

மீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா!

கடந்த சில நாட்களாக சூப்பர் மாடல் அழகி மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

45 ஆண்டு கால ரஜினியிஸம் வேற லெவல்: பிரபல நடிகரின் டுவிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது.

உலகின் விலையுயர்ந்த மாஸ்க்: விலை எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் உள்ள அனைவருமே மாஸ்க் அணிய வேண்டும் என உள்ளூர் சுகாதார மையம் முதல் உலக சுகாதார மையம் வரை அறிவுறுத்தியுள்ளது 

கோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்

கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய போது எதிர்பாராத வகையில் திடீரென விபத்துக்குள்ளானது

தமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை முறையை கொண்டுவர வேண்டும் என கடந்த மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது