தொலைநோக்கு கொண்ட கல்வியாளர்  A. N. ராதாகிருஷ்ணன் மறைவு.. இறுதிச்சடங்கு குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,December 05 2022]

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடம் (MAHER - deemed to - be university) யின் தலைவரும் மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் & முத்துக்குமரன் கல்வி டிரஸ்ட் - ன் நிர்வாக அறங்காவலரும் ஆகிய நாடு போற்றும் கல்வியாளர் திரு. A. N. ராதாகிருஷ்ணன் அவர்கள்,03-12-2022 அன்று காலை 7 மணிக்கு சென்னையில் காலமானார்.

எளிய பின்னணியில் இருந்து கல்வித்துறையில் முத்திரை பதித்த இவர் உத்தரமேரூர் அருகில் உள்ள அத்தியூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

தன்னுடைய எண்ணங்களால் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இவர் கல்வி என்பதன் வலிமையை நன்கு உணர்ந்து அறிந்தவர். ஆசிரியராக தம்முடைய உத்யோக வாழ்வைத் தொடங்கிய இவர், தமிழ்நாடு அரசு சார்ந்த தொழில்நுட்ப கல்வித்துறையின் கீழ் இயங்கும் SICE என்கிற வர்த்தக கல்வி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் மூத்த விரிவுரையாளர் ஆகப் பணியாற்றினார்.

அவர், தமது தொலைநோக்கு எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் 1984 ஆம் ஆண்டு, சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் செவன் ஹில்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கினார். ஆராய்ச்சியில் வலிமை மிக்க அடித்தளத்துடன் கூடியதாகவும் சமூகத்திற்கு தங்கள் கைவசம் மிகுந்த திறன் கொண்டவர்களை அளிக்க ஏதுவாக இருக்கும் மதிப்பு மிக்கதாக கல்வி இருக்க வேண்டும் என்பது அவரது ஆழ்மனதில் என்றும் இருந்து வந்தது என்பதற்கு அத்தாட்சியாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடம் (MAHER) திகழ்கிறது எனலாம்.

அவர் தொலைநோக்கு கொண்ட கல்வியாளர் ஆகவும் கொடை உள்ளம் உடையவர் ஆகவும் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் மனித நேயர் ஆகவும் விளங்கி பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் விட்டுச் சென்ற சீரிய பணிகள் அவரது அடிச்சுவட்டில் என்றென்றும் தொடரும்.

அவர் MAHER ன் நிர்வாக அறங்காவலர் ஆகவும் இதனுடைய வேந்தர் ஆகவும் சீரிய முறையில் தமது பணிகளை ஆற்றினார். இந்த டிரஸ்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்து டிரஸ்ட் மேற்கொண்ட ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் அமைத்தல் என்பதில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப கல்லூரிகள் அமைத்தல் வரை அவர் தமது அளப்பரிய பங்களிப்பை நல்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி என்பது அனைவருக்கும் கைக்கு எட்டுவதாக இருக்க வேண்டும் அவருடைய உள்ளக்கிடக்கையை இப்படிப்பட்ட கல்விக்கூடங்கள் வாயிலாக நிறைவேற்றிக் காட்டினார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் வரிகளை செயலுக்கு மொழிபெயர்த்த ஆளுமை திரு. A. N. ராதாகிருஷ்ணன் அவர்கள்

அன்னாரது இறுதிச் சடங்குகள் சென்னையில் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை செலுத்தினர்

More News

காஃபி வித் காதல்' திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய இந்த தமிழ் ரோம்-காம்  திரைப்படம் டிசம்பர் 9, 2022 அன்று  ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. 

அஜித் நடித்த 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா' பாடல் ரிலீஸ்  தேதி.. போனிகபூர் மாஸ் அறிவிப்பு

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஏரியாவுல யாருக்காவது மேட்டர் வேணும்ன்னா எனக்கு தான் கால் பண்ணுவாங்க.. 'பகாசூரன்' டிரைலர்

இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில்

'தப்பை தட்டிக்கேட்டா அதுக்கு பெயர் ரெளடித்தனமா? 'ரத்த சாட்சி' டிரைலர்

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான 'ரத்த சாட்சி' என்ற திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'விடுதலை' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துவரும் 'விடுதலை' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அதில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர்