close
Choose your channels

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க: அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வி

Friday, September 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ரித்விகாதான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ஐஸ்வர்யாவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் அனந்த் வைத்தியநாதன், மமதிசாரி மற்றும் பாலாஜி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். பாலாஜியிடம் ஏற்பட்ட மனமாற்றம் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக கூறிய அனந்த் வைத்தியநாதன், இந்த வீட்டில் இன்னும் எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை தாக்குப்பிடித்த உங்கள் எல்லோருக்கும் வெளியே ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது என்றும் ஆறுதலாக கூறினார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அழுகை, ஆணவ, ஆத்திரம் என அனைத்து வகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று மமதிசாரி கூறினார். மொத்தத்தில் இன்று மூவரின் வருகையால் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.