ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய மனைவி!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

சன் டிவியில் கடந்த 90களில் பிரபலமான ஆனந்த கண்ணன் கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர்களை உலுக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி கண்ணீருடன் நிறைவேற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்தவுடன் தனது மனைவியிடம் தனது கடைசி ஆசையை கூறியுள்ளார். என்னுடைய சாவு ஒரு துக்க நிகழ்ச்சி போல் இருக்கக் கூடாது என்றும் ஒரு கல்யாண வீடு மாதிரி இருக்க வேண்டும் என்றும் என்னுடைய பிணத்தை பார்க்க வரும் அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றும் அதேபோல் கொட்டு மேளத்துடன் என்னை தூக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவருடைய மனைவி கண்ணீருடன் நிறைவேற்றி உள்ளதாக ஆனந்த கண்ணனின் நெருங்கிய தோழியான நிஷா என்பவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்தகண்ணன் விரைவில் தமிழகம் வந்து ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்ததாகவும் அதே போன்று திரைப்படத்திலும் நடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் புற்றுநோய் வரை இந்த உலகத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சோகத்துடன் கூறியுள்ளனர்.
 

More News

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 'கோலி சோடா' நடிகர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்

பாலாஜி முருகதாஸை சகோதரராக ஏற்று கொண்ட ஷிவானி: அப்ப பிக்பாஸில் நடந்ததெல்லாம் என்ன?

நேற்று நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர்களாக ஏற்று கொண்டனர் என்பதும் குறிப்பாக ந

அதிகளவில் சம்பளம் பெறும், டாப் 5 தமிழ் நடிகர்கள் யார்....? தலைவரை பின்னுக்கு தள்ளிய தளபதி....!

தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளின் சம்பளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது,

பேருந்து படிக்கட்டில் நயன், சமந்தாவுடன் விஜய்சேதுபதி: 'வலையோசை' பாடல் ரீமேக்கா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

ஆட்டத்தைத் துவங்கிவிட்ட தாலிபான்கள்… நடைமுறைக்கு வந்த பகீர் சட்டம்!

தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில தினங்களில் பெண் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளனர்