close
Choose your channels

போதைப்பொருள் பிரச்சனையால் விஜய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகை!

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதை பொருள் குறித்து பிரபல நடிகையிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதை அடுத்து விஜய் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாச கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடைய வாட்ஸ்அப் தகவல்களில் இருந்து நடிகை அனன்யா பாண்டேவிடம் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தமிழ் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனன்யா பாண்டே நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டே சிக்கியுள்ளதாக தகவல் வந்ததும் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.