பிகில் மட்டுமல்ல.. 2.0, தர்பார் படங்களுக்கும் தலா ரூ.100 கோடி பைனான்ஸ்.. யார் இந்த அன்புச்செழியன்?!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

சொத்து பத்திரங்கள் கொடுத்துவிட்டு, ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும், சில நொடிகளில் 50 கோடி ரூபாய் வரை கடன் தருவார் அன்புச்செழியன். தமிழ் சினிமா உலகையே ஆட்டிப்படைத்த பைனான்சியர் அன்புச்செழியன் முதன் முறையாக வருமான வரித்துறை பிடியில் சிக்கியுள்ளார். அன்புச்செழியனிடம் புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

2015 -ம் ஆண்டு புலி திரைப்படம் வெளியான தருணத்தில் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றபோது, அவர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்ட வருமான வரித்துறை, இந்த முறை அவர் தப்பிவிடக்கூடாது என்பதால், மிக ரகசியமாகவே ரெய்டு திட்டத்தை தீட்டினர். அதன்படி புதன்கிழமை காலையில் முதல் நபராக அன்புச்செழியனை தங்களது விசாரணை வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டுவந்தனர். தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த அன்புச்செழியன், பிறகு வருமான வரித்துறையிடம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் என்கிறார் விசாரணை அதிகாரி.

கணக்கில் மறைத்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் சிக்கிய பிறகு அன்புச்செழியன் சரண் அடைந்துவிட்டதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.அவரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், பிகில் பட வசூல் மட்டுமின்றி, ஏராளமான திரைப்படங்களில் செய்துள்ள முதலீடு, வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 2.0, தர்பார் ஆகிய திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ரொக்கப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி பைனான்சியர் அன்புச்செழியன் கோடிக்கணக்கில் ரொக்கம் வைத்திருந்தது எப்படி என்பதை வருமான வரித்துறையினர் விசாரித்துவருகின்றனர். அதேபோல், அன்புச்செழியனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், சொத்து ஆவணங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் என்பது உறுதி செய்யப்பட்டால், இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

More News

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவே மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ளோம்..! அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். அதுவே எங்களின் கொள்கை. அதே நேரத்தில் தற்போதைய சூழலில் பல்வேறு விஷயங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.

SIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..!

இந்த கூகுள் மீனா, அலெக்ஸா, சிரி போன்று கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் தராமல் பயனாளருடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்!

இயக்குனர் சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு 2', 'கென்னடி கிளப்', மற்றும் 'சாம்பியன் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில்

'ஜானு'வுடன் திரை உலக வாழ்வை முடித்துக் கொள்ள சமந்தா முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான 'ஜானு' என்ற திரைப்படம் நேற்று வெளியானது. த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்திருந்த இந்தப் படத்திற்கு

அஜித் படத்தை மிஸ் செய்த நடிகருக்கு கிடைத்த தனுஷ் பட வாய்ப்பு

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது