close
Choose your channels

விஜய் டிவியில் இருந்து வெளியேறுகிறாரா பிரியங்கா: பாலா சொன்ன அட்வைஸ்

Sunday, May 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா வெளியேற இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பிரியங்கா இருந்து வருகிறார் என்பதும் அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமன்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பிரியங்கா இருந்து வருகிறார்.



பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா, ராஜூமுருகனை அடுத்த இரண்டாவது இடத்தையும் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.



அப்போது விஜய் டிவி பிரபலங்கள் உள்பட பலரும் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்கள். அப்போது பாலாவுடன் பிரியங்கா பேசி கொண்டிருக்கும் ஒரு வீடியோ மட்டும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனக்கு வயதாகி விட்டது என்றும் அதனால் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி ஒரு பிரேக் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு பாலா ’நீங்களே நினைத்தாலும் ஆங்கர் பணியிலிருந்து உங்களால் வெளியே போக முடியாது என்றும், மைக்கை பிடித்தவரெல்லாம் ஆங்கராக முடியாது என்றும் மைக்கிற்கே பிடித்தவர் நீங்கள்தான் என்று கூறும் காட்சி உள்ளதாக தெரிகிறது.

விஜய் டிவியில் இருந்து வெளியேற பிரியங்கா முடிவு எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.