விஜய் டிவியில் இருந்து வெளியேறுகிறாரா பிரியங்கா: பாலா சொன்ன அட்வைஸ்

  • IndiaGlitz, [Sunday,May 29 2022]

விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா வெளியேற இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பிரியங்கா இருந்து வருகிறார் என்பதும் அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமன்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பிரியங்கா இருந்து வருகிறார்.



பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா, ராஜூமுருகனை அடுத்த இரண்டாவது இடத்தையும் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.



அப்போது விஜய் டிவி பிரபலங்கள் உள்பட பலரும் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்கள். அப்போது பாலாவுடன் பிரியங்கா பேசி கொண்டிருக்கும் ஒரு வீடியோ மட்டும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனக்கு வயதாகி விட்டது என்றும் அதனால் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி ஒரு பிரேக் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு பாலா ’நீங்களே நினைத்தாலும் ஆங்கர் பணியிலிருந்து உங்களால் வெளியே போக முடியாது என்றும், மைக்கை பிடித்தவரெல்லாம் ஆங்கராக முடியாது என்றும் மைக்கிற்கே பிடித்தவர் நீங்கள்தான் என்று கூறும் காட்சி உள்ளதாக தெரிகிறது.

விஜய் டிவியில் இருந்து வெளியேற பிரியங்கா முடிவு எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

தனது படத்தில் நடிக்குமாறு கெஞ்சிய கமல்ஹாசன்: முடியாது என மறுத்த நடிகர்!

தனது படத்தில் நடிக்குமாறு உலக நாயகன் கமல்ஹாசன் கெஞ்சியதாகவும், ஆனால் அந்த நடிகர் நடிக்க முடியாது என மறுத்து விட்டதாகவும் சமீபத்தில் 'விக்ரம்' படத்தின் புரமோஷன்

நண்பரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான மறைந்த கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

நயன்தாரா திருமணம் திருப்பதியில் இருந்து மகாபலிபுரத்திற்கு மாறியது ஏன்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த திருமணம் மகாபலிபுரத்திற்கு

'யானை' படம் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட்ட அருண்விஜய்!

நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகிய 'யானை' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

'நெஞ்சுக்கு நீதி' தயாரிப்பாளர் போனிகபூர் போலீசில் புகார்: என்ன காரணம்?

சமீபத்தில் வெளியான உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் போலீசில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.