close
Choose your channels

ரயில் நிலையத்தில் தூங்கிய கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்: கணவன் கண்முன் நடந்த கொடூரம்

Monday, May 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா என்ற மாவட்டத்தில் உள்ள ராப்பள்ளே என்ற ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் ரயிலிலிருந்து இறங்கி உள்ளார். இரவு பதினொன்று முப்பது மணி என்பதால் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென மூன்று பேர் வந்து தூங்கி கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரது கணவரிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி கொண்டு தலைமறைவாகினர்.

கணவர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கணவர் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி உதவி கேட்ட நிலையில் உடனடியாக வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகள் 3 பேரையும் பிடித்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர் என்பதும் அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து மூவர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், திருட்டு மற்றும் கொள்ளை பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ஆந்திர அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.