விஷாலை சந்திக்க விருப்பம் தெரிவித்தாரா முதலமைச்சர்? அரசியலில் குதிக்க திட்டமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் விஷால் தற்போது சினிமாவில் இருக்கிறேன் அடுத்தது அரசியல் தான் என்று கூறிய நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுவதால் அவர் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷால் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தேர்வில் சுயேச்சையாக போட்டியிட முயற்சி செய்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டியிட போவதாக சமீபத்தில் திடீரென வதந்தி பரவிய நிலையில் தற்போது தனக்கு சினிமா மட்டுமே முக்கியம் என்றும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஷால் நடித்த ’லத்தி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்பட மாநிலங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகிறார். அவ்வாறு அவர் ஆந்திராவில் புரமோஷன் செய்து கொண்டு இருக்கும் போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடம் இருந்து சந்திக்க அழைப்பு வந்ததாகவும் இந்த சந்திப்பு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பின்னர் விஷால் ஆந்திர அரசியலில் ஈடுபடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments