2 மரங்களை 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அம்பானி… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

இந்தியத் தொழில்துறையில் கொடிக்கட்டி பறந்துவரும் முகேஷ் அம்பானி 180 ஆண்டு பழமையான 2 ஆலிவ் மரங்களை கிட்டத்தட்ட 85 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த மரங்கள் தற்போது ஆந்திராவில் இருந்து ஜாம்நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

முகேஷ் அம்பானி, குஜராத் நகரில் உள்ள ஜாம்நகரில் ஒரு மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார். இதற்காக அமைக்கப்படும் பூங்காவிற்க அரியவகை மரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் ஆந்திரா அருகே கடியத் பகுதியில் இயங்கிவரும் கவுதமி எனும் நர்சரி கார்டனில் 2 ஆலிவ் மரங்களை அவர் ஆர்டர் செய்துள்ளதாகவும் 180 பழமையான இந்த மரங்கள் தற்போது ஆந்திராவில் இருந்து ஜாம்நகரில் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தலா 2 டன் எடைக்கொண்ட ஆலிவ் மரங்கள் தற்போது கனமான டிரக்கில் வைத்து எடுத்துக் செல்லப்படுகின்றன. இந்த மரங்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்போது ஜாம்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பராமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செழுமையைக் கொண்டுவரும் என நம்பப்படும் இந்த மரம் கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகள் வாழக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் அடுத்த சூப்பர்ஹிட் படம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

வொர்க் அவுட்டிற்கு இடையே நடனம்… மாஸான வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

தமிழ், மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை பாவனா.

எனது நடிப்பிற்கு மிகப்பெரிய விருது கிடைத்துவிட்டது: எஸ்.ஜே.சூர்யா டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்

லைகா-யோகிபாபு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை, 11:11 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது!

இந்த எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அஜித்-விஜய் இயக்குனர்!

முதல்வர் அறிவித்த தொலைபேசி எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும் என அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.