close
Choose your channels

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியால் என்ற பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து முந்தைய நாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று, மறுநாள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ஒரு கும்பல் வந்து தங்கள் வீட்டுப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறாயா என்று தகராறு செய்தனர். இதனை அடுத்து, மணப்பெண் வீட்டார் போலீசாரை அழைத்னர்.

போலீசார் வந்து விசாரித்தபோது மோகனகிருஷ்ணனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதும், அந்தத் திருமணத்துக்கு அவர் ஆறு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 60 கிராம் நகை வரதட்சணையாக வாங்கி உள்ளார் என்பதும் அதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து வரதட்சணை வாங்கிவிட்டு, அவரை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற மோகனகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென திருமணம் நின்றது மணமகள் வீட்டார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.