தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியால் என்ற பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து முந்தைய நாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று, மறுநாள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ஒரு கும்பல் வந்து தங்கள் வீட்டுப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறாயா என்று தகராறு செய்தனர். இதனை அடுத்து, மணப்பெண் வீட்டார் போலீசாரை அழைத்னர்.

போலீசார் வந்து விசாரித்தபோது மோகனகிருஷ்ணனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதும், அந்தத் திருமணத்துக்கு அவர் ஆறு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 60 கிராம் நகை வரதட்சணையாக வாங்கி உள்ளார் என்பதும் அதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து வரதட்சணை வாங்கிவிட்டு, அவரை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற மோகனகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென திருமணம் நின்றது மணமகள் வீட்டார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

More News

டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்! 

டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் 'என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: சென்னையை மிஞ்சிய முக்கிய நகரம்

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு

கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே

அஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள 'வலிமை' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்தது.

அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே 'குற்றம் 23'