வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் ’ஆடுகளம்’. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’ஆடுகளம்’ படம் குறித்து பலரும் அறியாத ஒரு உண்மையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களான டாப்ஸி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகிய கேரக்டர்களுக்கு டப்பிங் கொடுத்த பிரபலங்கள் குறித்த தகவல் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது

நடிகை டாப்சிக்கு நடிகை ஆண்ட்ரியாவும், கிஷோருக்கு நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும், ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவியும் டப்பிங் கொடுத்துள்ளார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒருசிலருக்கு ஏற்கனவே தெரிந்தாலும் பலருக்கும் ஆச்சரியமான தகவலாக உள்ளது. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி ஆகிய மூன்று பிரபலங்களும் அப்போதே பணியாற்றியுள்ளது குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

More News

பிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸை முடிந்த அளவு கட்டுப்படுத்துகிறது.

பங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாக்கிய 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா???

இந்தியாவில் அதிக வரிவருவாயை கொடுக்கும் இரண்டு டஜன் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன???

கொரோனா நோய்த் தொற்றானது பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகளின் மூலம் பரவுகிறது

திடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு

திடீரென சூழ்ந்துகொண்ட வெள்ளத்தில் பிரபல ஹீரோவின் அம்மா சிக்கிக் கொண்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது