வடசென்னை படத்தில் நடித்தது மிகவும் தவறு: மாஸ்டர் நடிகையின் அதிர்ச்சி பேட்டி 

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

தமிழ் சினிமாவில் ’கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமானாலும், கௌதம் மேனன் இயக்கிய ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் தான் படத்தில்தான் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’விஸ்வரூபம்’ ’அரண்மனை’ ’ஆம்பள’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகை நடிகை ஆண்ட்ரியா, தற்போது விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ திரைப்படத்தில் தான் படுக்கையறை காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தது தவறு என்று தற்போது தனக்கு புரிவதாகவும், அந்த படத்திற்கு பின்னர் தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் படுக்கையறை காட்சிகள் உள்ள வாய்ப்பாகவே வந்தது என்றும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் நல்ல கதை, கேரக்டர் அமைந்தால் சம்பளத்தை குறைத்து கொண்டு கூட நடிக்கவும் தயார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா கூறிய சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் அந்த காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.