close
Choose your channels

முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கே ஏற்படுத்த முடியாமல் ஒவ்வொரு நாட்டு அரசும் திணறி வரும் நிலையில் தற்போது விலங்குகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவாது என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் ஏற்கனவே கூறிய நிலையில் தற்போது விலங்குகளுக்கு பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள பிராங்க்ஸ் என்ற உயிரியல் பூங்காவில் இருந்த ஒரு புலிக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாகவும் இதனை அடுத்து அந்த பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் சோதனை செய்தபோது 6 புலிகளுக்கும் ஒருசில சிங்கங்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களையும் தாண்டி விலங்குகளுக்கும் கொரோனா பரவ ஆரம்பித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.