ஆடு, மாடுகளுடன் இனி பேசலாம்: நித்தியானந்தா அதிரடி

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

மென்பொருள் மூலம் ஆடு, மாடுகள் உள்பட அனைத்து விலங்குகளையும் பேச வைக்கவுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போன சாமியார்களில் ஒருவர் நித்தியானந்தா. ரஞ்சிதா விவகாரம் மற்றும் மதுரை ஆதினம் விவகாரத்தின் போது தலைப்பு செய்திகளில் அடிபட்ட சாமியார் நித்தியானந்தா தற்போது விலங்குகளை மென்பொருள் மூலம் பேச வைக்கவுள்ளதாகவும், அதிலும் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பேச வைக்கும் முயற்சியில் தான் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் பறவைகளுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், தனக்கு ஆயிரம் வயது என்றும் ஒரு சாமியார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வகையில் தற்போது நித்தியானாந்தா விலங்குகளை பேச வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்,.

குரங்குகள் உள்பட ஒருசில விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு இருப்பது போன்ற உள்ளுறுப்புகள் கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த விலங்குகளுக்கு சில உணர்வுகளை அளிப்பதன் மூலம் அதனை மாற்றமுடியும் என்றும் கூறியுள்ள நித்தியானந்தா, விலங்குகளின் வோக்கல் கார்டு எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரி செய்தால் விலங்குகளை எளிதில் பேச வைக்கலாம் என்றும் சோதனை முறையில் இது வெற்றி பெற்றுள்ளதாகவும் இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து விலங்குகளையும் பேச வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் மென்பொருள் நடைமுறைக்கு வந்தவுடன் உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் தமிழ், சமஸ்கிருதத்தில் பேசினால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்து உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்

More News

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தற்போது விக்ரம்பிரபு நடித்து வரும் 'துப்பாக்கி முனை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் எ

மிஷ்கின் என்னும் ராட்சஷ கலைஞன்

"சித்திரம் பேசுதடி" பட போஸ்டரை தினத்தந்தி பேப்பரில் முதன் முறையாகக் கண்டேன். கருப்பு பேக்கிரவுண்டில்  ஐந்து இருட்டு முகங்கள்.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் மெலடி இசையமைப்பாளர்

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த மெலடி இசையமைப்பாளர் டி.இமான், விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா?

காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.